For Quick Alerts
For Daily Alerts
Just In
திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி!
திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டிவனம்: இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டிவனம் அருகே நெடுஞ்சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்களிர் இரண்டு இளைஞர்கள் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த இளைஞர்களின் பெயர் அஜித்குமார் மற்றும் தமிழ்ச்செல்வன் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
In a accident Near in Dindivanam two youths died on the spot. after unknown vehicle hit the two two wheelers.
Story first published: Thursday, August 3, 2017, 23:52 [IST]