உளுந்தூர் பேட்டை அருகே கார் மீது தனியார் பஸ் மோதி விபத்து: கணவன் மனைவி பலி - வீடியோ
உளுந்தூர் பேட்டை அருகே கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை: நின்று கொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
சிதம்பரம் காத்தான்பிள்ளை தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் சென்னை மாடம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் உறவினர் வீட்டின் துக்க கழ்ச்சிக்கு தனது மனைவி மற்றும் உறவிர்னகளுடன் காரில் நேற்று திருச்சிக்கு சென்றார். உளுந்தூர் பேட்டை அருகே சாலையோரம் கார் நின்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று கார் மீது மோதியது. இதில் நடராஜன் அவரது மனைவி தேவிபோலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்ற 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.