For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்!

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்த வருகிறது. சென்னை, வேலூர், திருவள்ளூர் காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று மழை வெளுத்து வாங்கியது.

In the next 24 hours heavy rain would be there in southern state of Tamil Nadu: Meteorological Center

இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக இளையான்குடியில் 8 சென்டிமீட்டர் மழையும் பொன்னேரியில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

English summary
The Meteorological Center has warned that in the next 24 hours heavy rain would be there in southern state of Tamil Nadu. Chennai will get rain in the Evening times Meteorological Center said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X