For Daily Alerts
Just In
திருப்பூரிலும் போராட்டம்: 4 லட்சம் பின்னலாடை நிறுவனங்கள் மூடல்!
விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் பின்னலாடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் பின்னலாடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 லட்சம் பின்னலாடை நிறுவனங்கள் முடப்பட்டன.
தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
பல்வேறு தொழிற்சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. இதன் காரணமாக திருப்பூரில் 4 லட்சம் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன.
Comments
English summary
At the leadership of DMK Strike happens in Tamilnadu for supporting farmers. In Thirupur arround 4 lakhs Knitwear companies has been closed for supporting farmers.