தவிக்கும் மக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உதவி செய்யும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
கையில் பணமிருந்தும் மருத்துவ செலவுகளுக்கு தவிப்பவர்களுக்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உதவி செய்ய முன் வந்துள்ளனர்.
சென்னை: 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தடை செய்யப்பட்டதால் இன்றைக்கு கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மருத்துவ செலவிற்கும், மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் உண்ண வழியின்றியும் தவித்து வருகின்றனர். மருந்தகங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினாலும் பெரும்பாலான மருந்தகங்கள் தடை செய்யப்பட்ட நோட்டுக்களை ஏற்க மறுத்து வருகின்றன.
இவர்களுக்காக உதவி செய்ய முன் வந்துள்ளது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு. நாங்கள் உங்களுக்காக கிரெடிட் கார்டு (credit / debit card ) மூலம் பணம் செலுத்துகிறோம் .
பெரும்பாலான மருத்துவமனைகளில் , 500 மற்றும் 1000 ரூபாய்களை பெற்றுக்கொள்வதில்லை/அவசர மருத்துவ உதவிக்கு கீழ்கணட தொலைபேசிகளுக்கு அழைக்கவும்
நாங்கள் நீங்கள் இருக்கும் மருத்துவ மனைக்கே வந்து , உங்கள் 500 , 1000 ரூபாய்களை பெற்று கொண்டு, எங்களிடம் உள்ள கிரெடிட் கார்டு மூலம் , மருத்துமனைக்கு செலுத்துகிறோம். குறிப்பு : மேலதிகமாக எந்த பணமும் பெறப்படாது
தொடர்ப்புக்கு :
9840501449
9080098500
9841655345