For Daily Alerts
Just In
குன்னூரில் கூண்டில் சிக்காத சிறுத்தை... சேற்றில் சிக்கி உயிரிழந்தது
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சேற்றில் சிக்கி சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் சின்னவண்டிசோலை பகுதியில் 7 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று கடந்த 3 நாட்களாக சுற்றித் திரிந்துள்ளது. காலில் பலத்த காயங்களுடன் சிறுத்தை ஒன்று நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
அந்த சிறுத்தையானது அங்குள்ள அம்மன் கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க இறைச்சியுடன் கூடிய கூண்டு வைத்திருந்தனர். இந்நிலையில், சிறுத்தையானது அங்குள்ள குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Comments
English summary
A seven-year-old injured male leopard drowned in a muddy slush in a pond in which it was stuck for 15 hours in a village on the suburbs of Coonoor, Forest Department officials said.
Story first published: Monday, June 13, 2016, 17:49 [IST]