For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் அதிரடி வருமான வரி சோதனை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாமக்கல்: மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்புக்குப் பின்னர் பலரும் கறுப்பு பணத்தை பல வழிகளிலும் வெள்ளையாக்கி வருகின்றன். கல்வி நிறுவனங்களில் ஊழியர்கள், மாணவர்கள் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து பல கல்லூரிகளில், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசியல்வாதிகள் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கியதாக எழுந்த புகாரை அடுத்து சேலம் கூட்டுறவு வங்கியிலும்,கடலூர் கூட்டுறவு வங்கியிலும் வருமான வரி சோதனை நடந்தது.

IT raid at Rasipuram Paavai Engineering college

இந்த நிலையில் இன்று நாமக்கல் அருகே பாவை பொறியியல் கல்லுரியில் பத்து பேர் கொண்ட அதிகாரிகள் வருமான வரி சோதனை மேற்கொண்டனர். காலை 10 மணி முதல் ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. கொங்கு மண்டலத்தில் தொடரும் ரெய்டு நடவடிக்கையால் அரசியல்வாதிகள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

English summary
IT raid at Rasipuram Pavai Engineering College in Namakkal district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X