For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு.. டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர்களுடன் முதல்வர் ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல்வருடனான ஆலோசனையில், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Jallikattu: Pannerselvam met with TN police DGP and Chennai police commissioner

ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில், மாநில அரசு மவுனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மக்கள் போராட்டத்தை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த ஆலோசனையின்போது முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

மெரினாவில் தற்போது ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்ட களத்திற்கு முதல்வர் நேரில் வர வேண்டும், அவரிடம் வாக்குறுதி பெற வேண்டும் என்பது போராட்டக்காரர்கள் கோரிக்கை. இதையேற்று பன்னீர்செல்வம் மெரினா செல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
CM O.Pannerselvam met with TN police DGP and Chennai police commissioner over Jallikattu issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X