For Daily Alerts
Just In
ஜல்லிக்கட்டில் மிருகவதை.. பீட்டா திடீர் மனு! ஜல்லிக்கட்டு திருத்த சட்டத்தை ரத்து செய்யவும் கோரிக்கை
சென்னை: தமிழக ஜல்லிக்கட்டில் மிருகவதை நடைபெற்றுள்ளதாக பீட்டா அமைப்பு திடீரென வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை உடைக்கும் வகையில், தமிழக அரசு ஜல்லிக்கட்டு திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. அதற்கு மத்திய அரசு, குடியரசு தலைவர் ஆகிய தரப்பில் ஒப்புதல் பெறப்பட்டது. எனவே இவ்வருடம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை தொடர்ந்து அரசுகள் பணிந்து இந்த நடவடிக்கையை எடுத்தன.
இந்த நிலையில், இவ்வாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, மிருகவதை நடந்திருப்பதாக கூறி பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. மிருகவதை நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், பீட்டா தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் பரபரப்பாகியுள்ளது ஜல்லிக்கட்டு விவகாரம்.
Comments
English summary
PETA moves SC challenging constitutional validity of The Prevention of Cruelty to Animals (Tamil Nadu Amendment) Act, 2017 in Jallikattu issue.
Story first published: Thursday, July 6, 2017, 17:50 [IST]