For Daily Alerts
Just In
போராட்டத்தை விட மாட்டோம்.. ரயிலை சுற்றி வளைத்தனர் மக்கள்.. மதுரையில் தொடரும் படபடப்பு
மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, மதுரையில் ரயில் மறியலில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, கோவையில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, மதுரை செல்லூரில் மக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 5 நாட்களாக, வைகை பாலத்தில் ரயிலை பொதுமக்கள் நிறுத்தி வைத்துள்ளனர். அதை மீட்கும் முயற்சியில் ஒருபக்கம் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபக்கம் ரயில் மறியல் நடக்கிறது. இதனால் மதுரை மாநகரமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
#JUSTIN #Madurai - செல்லூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து செல்ல மறுப்பு#Jallikattu #JallikattuProtests #RailRoko pic.twitter.com/CikD4fLpm3
— thanthitv (@thanthitv) January 23, 2017
Comments
English summary
Jallikattu prosters doing Rail rako in Madurai.