ஜல்லிக்கட்டு அனுமதி கோரி உச்சகட்ட போராட்டம்- போர்க்களமான தமிழகம் - live
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகமே போர்க்களமாக காட்சி தருகிறது.
சென்னை: தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உச்சகட்ட போராட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வருகின்றனர்.
-மாணவர்கள் போராட்டத்திற்கு மீனவர்கள் ஆதரவு
-நாகை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்
-இலங்கை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்
-விருதுநகர் பட்டாசு உற்பத்தியாளர்கள் நாளை வேலை நிறுத்தம்
-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தம்
-அலங்காநல்லூரில் 4-வது நாள் இரவும் போராட்டம் நீடிப்பு
-மெரீனாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்
-2 லட்சம் பேர் வரை மெரீனாவில் திரண்டுள்ளதாக தகவல்
-மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
-அரசுப் பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது
-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு விருதுநகரில் பள்ளிகள் விடுமுறை
-திருப்பூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
-தமிழகம் முழுவதும் மொத்தம் 2 லட்சம் பேர் போராட்டம்
-தமிழகம் முழுவதும் 460 இடங்களில் போராட்டம்
-சென்னையில் 210; பிற மாவட்டங்களில் 250 இடங்களில் போராட்டம்
-மதுரையில் இருந்து புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
-மதுரை ரயில்வே சந்திப்பின் இருபுறமும் ரயில்கள் நிற்கிறன
-மதுரை வழியாக ரயில்கள் செல்ல முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர் போராட்டக்குழுவினர்
-திண்டுக்கல் ரயில் நிலையத்திலும் மறியல் போராட்டம்
-தென்மாவட்ட ரயில்கள் மதுரைக்கு வர முடியவில்லை
-தென்மாவட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்
-சென்னையில் இருந்து வந்த வைகை ரயில் திண்டுக்கல்லுடன் ரத்து
-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தம்
-வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் திண்டுக்கல்லில் தவிப்பு
-வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாயும் வரை ரயில் மறியல் நீடிக்கும் என அறிவிப்பு
-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு முட்டை விநியோகம் நிறுத்தம்
-நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் அறிவிப்பு
-ஜல்லிக்கட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை
-காவல் துறை கூடுதல் ஆணையர்கள் பேச்சுவார்த்தை
-சங்கர், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்
-சேலத்தில் ரயில் சிறைபிடிப்பு
-ரயில்பெட்டி மீது ஏறி போராடிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது
-உயர்மின்அழுத்த கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்தது
-மாணவர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்
-ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போரடி வருகின்றனர்
-டெல்லி வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
-ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டம் இயற்ற முடியுமா - முதல்வர் ஓபிஎஸ் டெல்லியில் ஆலோசனை
-ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தடியடியே நடக்கவில்லை- ஓபிஎஸ்
-ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்- ஓபிஎஸ்
-ஜல்லிக்கட்டு நடத்த தமிழகம் எடுக்கப் போகும் நடவடிக்கையை நீங்கள் விரைவில் அறிவீர்கள்- ஓபிஎஸ்
-டெல்லியில் முதல்வர் பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பு
-பிரதமரை சந்தித்த பின்னர் முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்
-டெல்லியில் ஓபிஎஸ் பேட்டி
-சென்னையில் அடுத்த கட்ட போராட்டம் வெடித்தது
-சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்
-வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலை மறித்து போராட்டம்
-ஜல்லிக்கட்டு விவகாரத்துக்கு பதில் வறட்சி நிவாரணம் குறித்து ஓபிஎஸ் பேட்டி
-ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தினேன்
-தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதை எடுத்துக்கூறினேன்
-39,565 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கேட்டுள்ளோம்
-ஜல்லிக்கட்டு விவகாரத்தை பேசாமல் 'சின்னம்மா' புராணம் பாடிய ஓபிஎஸ்
-ஜல்லிக்கட்டுக்கு சட்ட திருத்தம் தேவை என மோடியிடம் வலியுறுத்தல்
-ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தேவை என வலியுறுத்தினேன் - ஓபிஎஸ்
-தமிழகத்தின் உணர்வுகளை மதிப்பதாக மோடி கூறினார்- ஓபிஎஸ்
-தமிழர்களின் உணர்வுகளை முழுமையாக அறிவேன் என மோடி கூறினார்
-உச்சநீதிமன்ற தீர்ப்பு தராத நிலையில் தமிழக அரசு நடவடிக்கைக்கு மோடிஆதரவு- ஓபிஎஸ்
-உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கு எதுவும் செய்ய முடியாது- மோடி கைவிரிப்பு
-ஜல்லிக்கட்டு கலாசாரத்தை மத்திய அரசு பாராட்டுகிறது- மோடி
-ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு- மோடி
-ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஆதரவு- மோடி
-வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வரும் - மோடி
-முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து பேசிய பின்னர் மோடி அறிவிப்பு
-ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது - மோடி
-ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது- மோடி
-வாடிவாசல் திறக்காதவரை வீட்டு வாசலை திறக்கமாட்டோம்- அலங்காநல்லூர் பெண்கள் ஆவேசம்
-ஜல்லிக்கட்டு- அதிமுக பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து- சசிகலா
-சென்னையில் 15 இடங்களில் போராட்டம்
-திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
-ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தல்
-பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார் முதல்வர் ஓபிஎஸ்
-மோடியை சந்தித்து பேசிவிட்டு கிளம்பினார் ஓபிஎஸ்
-ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டத்தை விளக்கினார்
-ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கோரி வழக்கு
-ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்- மத்திய அரசு ஆலோசனை
-ஜல்லிக்கட்டு பிரச்சினை - மத்திய சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆலோசனை
-மதுரை தமுக்கம் மைதானத்தில் 3-வது நாளாக போராட்டம்
-கொட்டும் பனியில் தொடர்கிறது தமிழகம் முழுவதும் போராட்டம்
-உதகையிலும் கல்லூரி மாணவர்கள் பேரணி
-அலங்காநல்லூரில் 4-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
-சென்னை மெரினாவில் 3-வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம்
-கோபிசெட்டி பாளையத்தில் மாணவர்கள் பேரணி
-நத்தத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாணவர்கள் நடைபயணம்
-தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் பேரணி
-நாகர்கோவில், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் பேரணி
-ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி திருப்பூரில் செய்தியாளர்கள் போராட்டம்
-தமிழ்நாட்டில் நாளை 4 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு
-சென்னை அடையாறில் ஐடி பணியாளர்கள் தொடர் போராட்டம்
-மணப்பாறையில் தடையை மீறி 5-வது நாளாக ஜல்லிக்கட்டு
-தமிழகத்தில் நாளை திரையரங்குகள் மூடப்படுகின்றன
-திருச்சியில் முழு அடைப்பு போராட்டம்