ஜெ. பதவியேற்கும் முன்பே 'டிராபிக் ஜாம்' பரிசு: குஷ்பு கோபம்
சென்னை: ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கும் முன்பே மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை பரிசாக அளித்துள்ளார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி சென்னை திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து அதிமுகவினர் சென்னைக்கு வந்துள்ளனர், வந்து கொண்டிருக்கின்றனர்.
Return of #JJ in TN gives her 1st gift even b4 she takes the oath is traffic jam,new roads dug up 2 pls her with her pics..tmrw wl b worst .
— khushbusundar (@khushsundar) May 22, 2015
இன்று ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேறி ஆளுநரை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளதால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் ஜெஜெ திரும்பிவந்துள்ளதால் அவர் பதவியேற்கும் முன்பே கிடைத்துள்ள முதல் பரிசு போக்குவரத்து நெரிசல். அவரை மகிழ்ச்சிபடுத்த புதிதாக போடப்பட்ட சாலைகளை தோண்டி பேனர்களை வைத்துள்ளனர். நாளை இதைவிட மோசம் என்று தெரிவித்துள்ளார்.