For Daily Alerts
Just In
கொடநாடு: கார் டிரைவர் கனகராஜ் மர்ம மரணம்- ஓபிஎஸ் கோஷ்டி எம்.எல்.ஏ ஆறுக்குட்டிக்கு சம்மன்
சென்னை: ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்துவதற்காக, ஆஜராகும்படி எம்.எல்.ஏ. ஆறுகுட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கடந்த மாதம் 28ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, விபத்தில் கனகராஜ் இறப்பதற்கு முன் கவுண்டாம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ றுகுட்டிக்கு 4 முறை மொபைல் போனில் அழைத்திருந்ததாக தகவல்கள் தெரிய வந்தது.
அழைப்பு வந்தது குறித்து விசாரிக்க, ஆறுகுட்டி எம்.எல்.ஏ நாளை காலை 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி அக்காவல்நிலையம் சம்மன் அளித்துள்ளது.
ஆறுக்குட்டி தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். இவருக்கும் ஜெயலலிதா கார் டிரைவருக்கும் என்ன தொடர்பு என்பது மர்மமாக உள்ளது.
Comments
English summary
MLA Arukkutty to appear for the investigation over death of Jayalalithaa's car driver, police issues summon.