முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் திடீர் ரத்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில், இன்று காலை 11 மணி 1 நிமிடத்திற்கு, ஜெயலலிதா, எம்.எல்.ஏவாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
எம்.எல்.ஏ. பதவியேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, அதானி நிறுவனத்துடனான சோலார் மின் உற்பத்தி ஒப்பந்தம் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்தானது.
இதன் பிறகு, முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கிருந்தே அவர் அரசு பணிகளையாற்றுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவரது கொடநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.