For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. ஆவி என் கூட பேசுச்சே... திகில் கிளப்பும் திருவாரூர் சாமியார்!

ஜெயலலிதாவின் ஆவி பேசியதாக திருவாரூரை சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் ஆவி தன்னிடம் பேசியதாக திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆவி தன் மீது இறங்கியிருப்பதாக கூறிய சாமியார், ஜெயலலிதாவின் ஆன்மா போல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல் அவரது மரணம் வரை எல்லாமே மர்மமாக உள்ளது. ஜெயலலிதா மறைந்து 3 மாதங்கள் கடக்க உள்ள நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குடைச்சல் கொடுக்க சசிகலா தரப்பு ஜெ.வுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலை வரவழைத்து அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து விளக்கமளிக்க வைத்தது. ஜெ.மரணத்தில் ஏற்கனவே ஏராளமான மர்மங்களும் குழப்பங்களும் நீடித்து வரும் நிலையில் மருத்துவர்கள் அளித்த விளக்கம் கூடுதல் குழப்பத்தையும் சந்தேகத்தையும் கிளப்பி விட்டுள்ளது.

ஜெயலலிதாவின் ஆவி பேசியது

ஜெயலலிதாவின் ஆவி பேசியது

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்தார். அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும் அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என்று கூறி அனுமதிக்காக காத்திருந்தார்.

ஜெ.ஆவிப்போல் பேசினார்

ஜெ.ஆவிப்போல் பேசினார்

அவரிடம் நிருபர்கள் விசாரித்தபோது, கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாக சாமியார் ஸ்ரீ மகரிஷி கூறினார். அந்த ஆவி பேசுவது போலவும் அவர் பேசினார்.

'இறந்துதான் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன்'

'இறந்துதான் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன்'

அவர் பேசியதாவது, " நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன். ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும்.

ஓபிஎஸ்க்கு உறுதுணையாக இருப்பேன்

ஓபிஎஸ்க்கு உறுதுணையாக இருப்பேன்

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்தியமானவர். அவருக்கு உறுதுணையாக இருப்பேன்.

சதிகாரர்கள் வலையில் சிக்கக்கூடாது

சதிகாரர்கள் வலையில் சிக்கக்கூடாது

சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது. இவ்வாறு அந்த சாமியார் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதுப் போல் பேசினார். ஆவி, பேய், பூதம் எல்லாம் பொய் என்று கூறப்பட்டாலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் பரபரப்பை ஏற்படுத்திதான் வருகிறது.

English summary
A godman belongs to Thiruvarur says that Jayalalitha's sprit was spoken to him. That sprit was telling that my body only was keeping in hospital for 75 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X