For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் சண்டைபோட்ட நீதிபதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருச்சி: நீதிபதி ஒருவர், ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு செய்வதை போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டுள்ளது.

அந்த நீதிபதி, காரைக்காலில் பணி புரிவதாக கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினர் நீலகிரியில் வசிக்கிறார்கள். குடும்பத்தை பார்க்க வழக்கமாக இவர் காரைக்காலில் இருந்து ரயிலில் கோவைக்கு சென்று அங்கிருந்து நீலகிரிக்கு செல்வார்.

 A judge behaved indecently to TTR in the running Train IN Trichy

நேற்றும், இப்படி, எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பயணித்துள்ளார். தஞ்சாவூருக்கும் திருச்சிக்கும் இடையில் ரயில் சென்று கொண்டு இருந்த போது ஐடி கார்டு கேட்ட டிக்கெட் பரிசோதகரிடம் அந்த நீதிபதி கடுமையான வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டுள்ளார்.

டிக்கெட் பரிசோதகரின் குற்றச்சாட்டின்பேரில், திருச்சியில் சுமார் ஒருமணி நேரம் ரயில் நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், திருச்சியில் டிக்கெட் பரிசோதகர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

English summary
A judge behaved indecently to TTR in the running Train IN Trichy. Due to this problem TTR's protested to take action against Judge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X