சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி!
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த நீதிபதி இந்திரா பானர்ஜி, தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்பார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.கே கவுல் உச்சநீதிமன்றத்திற்குச் செல்கிறார். இதையடுத்து நீதிபதி எச்.ஜி ரமேஷ் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டுவந்தார். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு வாரங்களில் பதவி ஏற்பார்.
இந்திரா பானர்ஜி, 1985ஆம் ஆண்டு, கொல்கத்தா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 17 வருட வழக்கறிஞர் அனுபவத்துக்குப் பிறகு, 2002ஆம் ஆண்டு கொல்கத்தா திமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.
அதன்பிறகு, 2016 ஆகஸ்டு மாதம் முதல் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். கொலீஜியத்தின் பரந்துரையின் பேரில் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிகப்பட்டுள்ளார்.
இவர் கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.