குண்டு வீச்சு வழக்கிலிருந்து காடுவெட்டி குரு விடுதலை!
அரியலூர்: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை, வெடிகுண்டு வீச்சு வழக்கிலிருந்து அரியலூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டசபை உறுப்பினராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவருமாக இருப்பவர் குரு.
இவர் மீதும், அரியலூர் மாவட்ட பாமக செயலாளர் வைத்தி, ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் கொளஞ்சி ஆகிய 3 பேர் மீதும் கடந்த 10-3-2008 ல் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி செல்வம் என்பவர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டதாக உடையார்பாளையம் காவல் நிலையத்தினர் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணவள்ளி, புதன்கிழமை தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை போலீஸ் தரப்பு சரிவர நிரூபிக்காத காரணத்தால் அனைவரையும் விடுதலை செய்வதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.