கலாம் இன்னும் நம்முள் வாழ்கிறார்.. டிவிட்டரில் நினைவு கூறிய மக்கள்!
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாளான இன்று ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் #APJAbdulKalam, #தலைமகன்_கலாம் ஆகிய ஹேஷ்டேக்குள் டிரெண்டாகுகின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பலரும் ட்விட்டரில் அப்துல் கலாம் அவர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையொட்டி ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் #APJAbdulKalam, #தலைமகன்_கலாம் ஆகிய ஹேஷ்டேக்குள் டிரெண்டாகுகின்றன.
|
ஆசை
பெண் மேலயும் ஆசை இருந்ததில்லை, பொன் பணம் மேலயும் ஆசை வரவில்லை #தலைமகன்_கலாம்
|
அக்னி நாயகன்
அக்னி நாயகன்
இளைஞர்களின் ஆசான்
எளிமையின் சுடர்
அறிவியல் நாயகன்
தமிழர்களின் தந்தை
விஞ்ஞானத்தின் சிற்பியே எங்கள் கலாம் ஐயா!!!!! #தலைமகன்_கலாம்
|
வழியனுப்பல்
#தலைமகன்_கலாம்
நம் எண்ணங்களில் நம்பிக்கையை விதைத்தவருக்கு, வண்ணங்களால் ஒரு வழியனுப்பல்...
|
நினைவுகள்
சும்மா ட்ரெண்டிங்காக இந்த டேக் இல்லை எங்கள் மனதில் இருக்கும் நினைவுகளின் பதிவேட்டாக இது...
we miss u sir #தலைமகன்_கலாம்
|
எளிமை
உயர்ந்த பதவிகளில் அமர்ந்தாலும், தவறாக அதைப் பயன்படுத்தாமல், எளிமையாக இருந்த இனிமையான மனிதர்.that's why we luv him #APJAbdulKalam
|
மணல் சிற்பம்
#APJAbdulKalam அவர்களின் முதலாவது நினைவு நாளன்று பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது பாணியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.