கருணாநிதியின் பி.ஏ. சண்முகநாதனுக்கு திடீர் உடல்நலக் குறைவு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளரான சண்முகநாதன் நேற்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
முரசொலி சிங்காரம் மகன் மதிவாணன் - கார்த்திகேயன் மகள் ஸ்வர்ணா ஆகியோரது திருமணம் நேற்று கலைஞர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற, திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு திடீர் உடல் சோர்வு ஏற்பட்டது.
இதனால், சண்முகநாதனுக்கு வழக்கமாக தரப்படுகிற நான்கு மாத்திரைகளுடன் கூடுதலாக ஒரு மாத்திரையை அவரது மகன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சண்முகநாதனுக்கு இரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.
உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார் சண்முகநாதன். சிகிச்சைக்குப் பின் சண்முகநாதனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றிரவு அவர் வீடு திரும்பினார்.