மதிமுகவை உடைக்க வைகோ ஒருவர் போதாதா.. இது 2009ல் கருணாநிதி போட்ட போடு!
சென்னை: மதிமுகவை உடைக்க வைகோ ஒருவர் போதாதா என்று 2009ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி சாடியிருந்தார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை பிளாஷ்பேக் இது....!
கேள்வி: ம.தி.மு.க.வை உடைக்க சதி நடப்பதாக வைகோ பேசியிருக்கிறாரே?
பதில்: ஆமாம் உண்மைதான். ஆனால் அந்தச் சதியை செய்ய அவர் ஒருவர் போதாதா? அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோது அவருடன் சென்ற பொன்.முத்துராமலிங்கம், சங்கரன்கோவில் தங்கவேலு, கரூர் கே.சி.பழனிசாமி, எல்.கணேசன் எம்.பி., என்.செல்வராஜ், டி.பி.எம்.மைதீன்கான், வேங்கடபதி, திருச்செங்கோடு கந்தசாமி, செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி., மு.கண்ணப்பன் எம்.எல்.ஏ., டி.கே.சுப்பிரமணியம், விஜயா தாயன்பன், இரா.சபாபதி மோகன், டி.ஏ.கே.லட்சுமணன் போன்றவர்கள் அங்கே இல்லாததற்கு யார் காரணம்?
முதலில் தி.மு.க.வை உடைக்க சதி செய்தவற்கு, சதியைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? சதியை பற்றி சகுனி பேசுவதா? என்று கூறியிருந்தார் கருணாநிதி.