"தலைவர்" யாரைப் பத்திச் சொல்லியிருக்காருன்னு உங்களுக்கு ஏதாவது புரியுதா...?
சென்னை: நடிகை குஷ்பு காங்கிரஸில் போய்ச் சேர்ந்துள்ள நிலையில், திமுக தலைவர் தனது பேஸ்புக்கில் போட்டுள்ள ஒரு புகைப்பட தத்துவம் யோசனையைக் கிளறி விடுவதாக உள்ளது.
திமுக தலைவரின் புகைப்பட தத்துவம் பலரையும் கவர்ந்துள்ளது. அவ்வப்போது ஏதாவது ஒரு தத்துவத்தை புகைப்படத்துடன் இணைத்து வெளியி்ட்டு வருவார் கருணாநிதி. அதுவும் அந்த சமயத்தின் அரசியல் நிகழ்வுகள் அல்லது பொது நிகழ்வுகளை மையப்படுத்தி அமையும். சில நேரம் பொதுவான தத்துவமாகவும் மலரும்.
இந்த நிலையில், திமுகவில் தீவிரமாக ஈடுபட்டு பின்னர் அங்கிருந்து கசப்பான அனுபவத்துடன் நடிகை குஷ்பு வெளியேறியுள்ள நிலையில் ஒரு புகைப்பட தத்துவத்தை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் கருணாநிதி.
அதில், நெருப்புக் குழியில் விழப் போகுமுன் அனலைக் கண்டு அஞ்சலாமா... கடலிலே குதிக்கத் தீர்மானித்த பின் அலையைக் கண்டா மனங்குலைவது என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
இது குஷ்புவுக்கானதா அல்லது வேறு எதையாவது குறிக்கிறதா என்று தெரியவில்லை.