For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல்நிலையத்தில் கிரண் பேடி திடீர் ஆய்வு.. கொள்கை முடிவு குறித்து மக்களிடம் விளக்க அறிவுறுத்தல்

புதுச்சேரி காவல்நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல்துறையின் கொள்கை முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என அவர் அறவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும இடையே மோதல் நிலவி வருகிறது. ஆளுநரான கிரண் பேடி அரசு விவகாரத்தில் தலையிடுவதாகவும் அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

Kiran bedi suddenly visited the muthialpet police station

இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள், மீனவர்கள் சங்கங்களுடன் போலீஸ் அடிக்கடி கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என கிரண் பேடி அறிவுறுத்தினார்.

மேலும் காவல்துறையினர் நவீன தகவல் தொடர்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார். மேலும் காவல்துறையின் கொள்கை முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் அவர் காவல்துறையினரிடம் அவர் தெரிவித்தார்.

English summary
Kiran bedi suddenly visited the muthialpet police station. and said police officials to explain the public about the principles of police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X