For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரி அருகே இரு குழந்தைகளுடன் ஆசிரியை கடத்தல்: போலீஸ் தேடுதல் வேட்டை

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இரண்டு குழந்தைகளுடன் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் செருப்புகடை உரிமையாளரான கோவிந்தராஜ். 28 வயதான இவரது மனைவி ஸ்ரீதேவி, மாரண்டஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

Krishnagiri: Woman teacher kidnapped with two children

செருப்புக்கடை உரிமையாளர் கோவிந்தராஜ், கடந்த, 8-ஆம் திருச்செந்தூர் சென்றார். 10-ஆம் தேதி வீடு திரும்பிய போது,மனைவியும் குழந்தைகளும் காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும், ஸ்ரீதேவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. தொடர்ந்து விசாரித்ததில் மாரண்டஹள்ளியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் ஸ்ரீதேவியையும், அவருடைய குழந்தைகளையும் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாரண்டஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குழந்தைகளுடன் சென்ற ஸ்ரீதேவி மற்றும் தட்சிணமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீதேவியையும், அவரது குழந்தைகளையும் தட்சிணாமூர்த்தி கடத்திச் சென்றாரா? அல்லலு ஸ்ரீதேவி அவருடன் விரும்பிச் சென்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Near Krishnagiri a woman teacher was kidnapped with her two children. The police have launched a search operation to rescue them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X