For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை.

last five years did not development in tamilnadu, said stalin

ஜெயலலிதா சிகிச்சையின் போது அவர் உடல் நிலை குறித்து அவருடன் இருந்தவர்கள் கவலைப்பட வில்லை. அப்போதே சதி ஆரம்பமாகி விட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முறையான, உண்மையான தகவல்கள் வெளியிடப்பட வில்லை.

கடந்த தேர்தலில் திமுக - அதிமுக இடையே வாக்கு வித்தியாசம் 1.1 சதவீதம் மட்டுமே. 89 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபையில் பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாக திமுக உள்ளது. மக்களை நேரடியாக சந்தித்து வெற்றி பெறும் கட்சியே திமுக. என்றைக்கும் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கும் கட்சி அல்ல. திமுகவைப் போல் வெற்றி பெற்ற கட்சியும் இல்லை, தோல்வியுற்ற கட்சியும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

English summary
last five years did not development in tamilnadu, said DMK working president M.K. stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X