இன்றுதான் ஜெயலலிதாவை தமிழகம் கடைசியாக உயிரோடு பார்த்த நாள்!
தமிழகத்தின் இரும்பு பெண்மணி என கூறப்படும் ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே நாளில் மெட்ரோ ரயில் நிலைய தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
Recommended Video
சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனப்படும் சகாப்தம் கடந்த ஆண்டு இதே நாளில் நம்முடன் இருந்த நிலையில் அவர் தற்போது இல்லை என்பதை நினைக்கும் போது அதிமுகவினரின் நெஞ்சம் பதைபதைக்கிறது.
பன்முக திறமை கொண்ட ஜெயலலிதா தமிழகத்தில் இரு முறை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றினார். அவர் தொடங்கி வைத்த அம்மா உணவகம், ரூ.10 க்கு குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் ஏழைகள் மூன்று உணவு உண்ணவும், தாகத்துக்கு தண்ணீர் பருகவும் வித்திட்டது.
இதுமட்டுமல்லாமல் இலவச மடிக்கணினி, தாலிக்குத் தங்கம், இலவச சைக்கிள், இலவச மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தினார். இன்றும் ஏழைகளின் வீடுகளில் அன்றாடம் அடுப்பெரிகிறது என்றால் இலவச அரிசி திட்டம் அதற்கு முக்கிய காரணம்.
இன்று கடைசி நாள்
இத்தகைய சாதனைகளுக்கு சொந்தகாரரான ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே தினத்தில் சென்னையில் மெட்ரோ பயணிகள் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கிய நாள் இன்று ஆகும். இதற்கு அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 22ம்தேதி ஜெயலலிதா உடல்நல குறைபாடு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
75 நாள்கள்
சுமார் 75 நாள்கள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவர் கடைசியாக உயிரோடு மக்களால் பார்க்கப்பட்ட இந்த தினத்தை எண்ணி அதிமுகவினர் கண் கலங்கி வருகின்றனர். இது குறித்து டுவிட்டரில் மக்கள் தங்கள் வருத்தங்களை பகிர்ந்துள்ளனர்.
|
கடைசி நாள்
எங்கள் தலைவியின் கடைசி நிகழ்ச்சி
நாளையுடன் ஒரு வருடமாகிறது
தமிழகம் உங்களைப் பார்த்து...
|
உலகம் பார்த்த நாள் இன்று
இந்த உலகம் உங்களை கடைசியாக பார்த்த நாள் இன்று 😢😢😢
|
கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி
ஜெயலலிதா கடைசியாக கலந்து கொண்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவின் அழைப்பிதழ்.
|
மிகப் பெரிய வெற்றிடம்
இரு சகாப்தங்களை இழந்துவிட்டோம். இதனால் ஏற்பட்டது மிகப் பெரிய வெற்றிடம்.
|
சிங்கமாக இறங்கிய தருணம்
கடைசியாக பாசத்தாய் வாகனத்தில் இருந்து சிங்கமாக இறங்கிய தருணம்..
மறக்க முடியுமா..