For Daily Alerts
Just In
நீலகிரியில் மீண்டும் பீதி! மூன்று மாடுகளை அடித்துக் கொன்றது சிறுத்தை!!
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3 மாடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவருக்குச் சொந்தமான 3 மாடுகள் கடந்த 2 நாட்களாகக் காணவில்லை.
மாடுகளை அவர் தேடிக் கொண்டிருந்த போது 3 மாடுகளின் உடல்களும் அருகிலுள்ள கண்டெடுக்கப்பட்டன. தகவலறிந்த குன்னூர் வனசரகர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் அந்த மூன்று மாடுகளையும் சிறுத்தை கொன்றது உறுதி செய்யப்பட்டது. சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தில் மனிதர்களை வேட்டையாடிய புலி சுட்டுக் கொன்று பிடிக்கப்பட்டிருந்தது. தற்போது சிறுத்தை மாடுகளை வேட்டையாடியிருப்பதால் அப்பகுதி மக்கள் மீண்டும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
Comments
English summary
Nilgiri people got fear due to a leopard killed three cows in the village side.
Story first published: Saturday, May 30, 2015, 15:03 [IST]