வீடுகளுக்கு மத்தியில அசால்டா நடக்குற சிறுத்தை... திகுதிகு வீடியோ
கோத்தகிரியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் எந்த குறுகுறுப்பும் இன்றி கம்பீரமாக சிறுத்தை நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அது பார்ப்பவரை அச்சுறுத்துவதாக உள்ளது.
கோத்தகிரி: கோத்தகிரியில் சிறுத்தை ஒன்று குடியிருப்புப் பகுதிகளில் நடமாடுவது தனியார் நிறுவன சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இரவில் தடுப்பு சுவர் மீது எந்த அலட்டலும் இல்லாமல் சிறுத்தை செல்வதைப் பார்க்கும் போது திகிலாக உள்ளது.
கோத்தகிரி நகரில் எஸ்.ஐ.எஸ்.எம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என அப்பகுதி மக்கள் கூறிவந்தார்கள். குடியிருப்புப் பகுதிக்கு வரும் சிறுத்தை, அங்கிருக்கும் நாய்களை கவ்விச் சென்று விடுகிறது என புகார் எழுந்தது.
இந்நிலையில் தனியார் நிறுவன சிசிடிவி கேமிராவில் சிறுத்தை ஒன்று அங்கிருக்கும் தடுப்பு சுவர் மீது கம்பீரமாக நடந்து செல்லும் காட்சி, பார்ப்பவர்களுக்கு திகிலாக உள்ளது. வனப்பகுதிக்கு அருகே குடியிருப்புகளை விஸ்தரித்துக்கொண்டே செல்வதால், வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிடுவது இயல்பாக நடக்கும் விஷயமாக மாறி வருகிறது.