இனிஷியல், முற்றுப்புள்ளியால் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதில் சிக்கல்
சென்னை: ஆதார் கார்டுடன், பான் கார்டை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் பலருக்கு புதுப் புது பிரச்சனை கிளம்பியுள்ளது.
வரும் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் வரி செலுத்தும் அனைவரும் தங்கள் பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி செலுத்த பான் கார்டுடன் ஆதார் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்நிலையில் பலருக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வங்கி ஊழியர் கே. வெங்கடேஷால் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க முடியவில்லை.
காரணம் ஆதார் டேட்டாபேஸில் வெங்கடேஷின் இனிஷியல் கே ஆனது கிருஷ்ணமூர்த்தி(தந்தையின் பெயர்) என எழுதப்பட்டுள்ளது. பான் கார்டில் கே என உள்ளது. இதனால் இரண்டு கார்டுகளையும் இணைக்க முடியாமல் உள்ளது.
இதை மேனுவலாக மாற்ற முடியாது என்பதால் சிக்கல் பெரிதாகியுள்ளது. யூஜின் டி சில்வாவுக்கு(Eugiene D'Silva) வேறு பிரச்சனை. டிக்கும் சில்வாவுக்கும் இடையே உள்ள ' இந்த சிம்பல் பான் கார்டில் உள்ளது ஆதார் கார்டில் இல்லை. இதனால் அவருக்கு பிரச்சனை.
இந்த பிரச்சனைகளால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.