அடடே ஆச்சரியம்.. போன "பஞ்சாயத்தும்" இதே அக். 17,19ல்தான் நடந்தது!
சென்னை: 2011ம் ஆண்டு தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடந்த அதே தேதிகளில் அதேபோல இரண்டு கட்டமாக இந்த ஆண்டு தேர்தலும் நடக்கப் போவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இது தற்செயலானதா அல்லது சென்டிமென்ட்டாக இந்தத் தேதியை தேர்வு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து 2011 அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பதிவு அக்டோபர் 21ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலும் அதே தேதிகளில்தான் இரு கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையும் கூட 21ம் தேதிதான் நடைபெறவுள்ளது.
கடந்த தேர்தலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதேபோல இந்த முறையம் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
எல்லாம் தற்செயலானதா அல்லது சென்டிமென்ட்டாக அதே தேதிகளை இந்த முறையும் தேர்வு செய்தனரா என்று தெரியவில்லை.
எல்லாம் சரி, போன வருட தேர்தல் முடிவுகளையே இந்த வருடமும் காட்டாமல் இருந்தால் சரித்தான்!