வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் - வலுவடையும் - 3 நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் கன மழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் "இ சயின்டிஸ்ட்" டாக்டர் எஸ்.ஆர்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாலச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதன் காரணமாக அடுத்த 3 நாட்களில் கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம்.
அதேமயம், நவம்பர் 1ம் தேதி கடலோரத் தமிழகம் மற்று் புதுச்சேரியில் கன அல்லது மிக கனத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழையின் அளவானது படிப்படியாக அதிகரிக்கும்.
சென்னயைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கும்.
வரும் நாட்களில் அதிக மழையை எதிர்பார்க்க முடியும் என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.