For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பினாமி ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது: ஸ்டாலின்

மக்களாட்சியை நிலை பெறச் செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது: எதிர்கட்சி தலைவர் என்ற பொறுப்புக்கும் கூட மரியாதை தராமல் வாகனத்தை சோதனையிட்டனர். மக்களாட்சியை நிலை பெறச் செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது. நம்பிக்கை தீர்மானத்தை சட்டமன்றத்தில் இரண்டு முறை முன்மொழிந்தார் சபாநாயகர். இது சட்டவிரோதமாகும்.

M.K.stalin Accusation on tamilnadu assembly speaker Dhanapal

அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அவசரமாக நடத்த கூடாது என வலியுறுத்தினோம், மக்கள் கருத்துகளை அறிந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க அவகாசம் அளிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துவிட்டார். பினாமி ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சபாநாயகர் செயல்படுகிறார்.

பெங்களூர் சிறையில் உள்ள குற்றவாளியின் பினாமி ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்துகிறார். சட்டமன்றத்தை ஜனநாயகம் செத்த மன்றம் ஆக்கிவிட்டனர். தமிழகத்தில் நடைபெறும் பினாபி ஆட்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே மக்களின் குரல். இந்த ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என்றார்.

English summary
DMK working president M.K.stalin Accusation on tamilnadu assembly speaker Dhanapal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X