For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகர் சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கான பிடிவாரண்டுக்கு தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்ட்டுக்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கான பிடிவாரண்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேர் மீது நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Madras HC banned To warrant for actor surya and others

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்து நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி 8 பேரும் உதகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உதகை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் உதகை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உடனடியாக 8 நடிகர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யா,சத்யராஜ் உள்ளிட்ட 8 பேரின் மீதான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

English summary
Madras HC banned Non-bailable arrest warrant has been issued against eight actors including Suriya in connection with a defamation case filed by a journalist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X