வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்துள்ளது.
வழக்கறிஞர்களுக்கு புதிய ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் நீதிமன்ற வளாக செயல்பாடுகளுக்கான புதிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய ஒழுங்கு விதிமுறைகளை பிறப்பித்துள்ளது.
இதன்படி
- நீதிபதியின் பெயரில் பணம் பெற்றது கண்டறியப்பட்டால் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்படுவார்கள்.
- ஒரு வழக்கறிஞர் நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கூறினால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்.
- நீதிமன்றம் நோட்டீஸ் வழங்காமல் நடவடிக்கை எடுக்குமானால் ஒழுங்குமுறை விதிகளை வழக்கறிஞர்கள் எதிர்க்கலாம்.
- மது அருந்திவிட்டு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நடமாடினால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு தடை விதிக்கப்படுவர்.