For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூரில் பயங்கர தீ.. தலையணை நிறுவனம் சாம்பல்.. பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு கருகியது!

By Siva
Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் நடந்த பயங்கர தீீ விபத்தில், தலையணை தயாரித்து ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் பேரும் சேதமடைந்தது. பல லட்சம் மதிப்புள்ள பஞ்சும் தீயில் எரிந்து நாசமானது.

கரூர் திருமாநிலையம் பகுதியில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான தலையணை தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

Major fire gutted cotton mill in Karur

இந்த நிறுவனத்தில் பஞ்சை அரைத்து தரம் பிரித்து, அதனை தலையணையாக தயாரித்து அயல்நாடுகளுக்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இந்நிறுவனத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இன்று இந்த நிறுவனத்தில் உள்ள பஞ்சு குடோனில் பஞ்சை அரவை செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பொறி பஞ்சு குவியலில் பட்டு தீ மளமளவென பரவியது.

Major fire gutted cotton mill in Karur

இதையடுத்து தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின்பேரில் இரண்டு தீயணைப வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயணை அணைத்தனர். இச்சம்பவத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.

English summary
A major fire gutted a cotton mill in Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X