காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து மக்கள் நலக்கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் நலக்க கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து வரம் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் நலக்கூட்டியக்கம் அறிவித்துள்ளது. கோவையில் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் காவல்துறையின் இந்த அத்துமீறலைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மக்கள் நலக்கூட்டியக்கம் அறிவித்துள்ளது. கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.