கக்கூஸ் ரிப்பேர்: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்
சென்னை: கழிப்பறைகள் ரிப்பேர் ஆனதால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.19ல் உள்ள கழிப்பறைகள் ரிப்பேர் ஆனதால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கழிப்பறைகள் ரிப்பேர் செய்யப்பட்ட பிறகு விமானம் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு கிளம்பிச் சென்றது. முன்னதாக கடந்த ஆண்டு 298 பேருடன் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு 298 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உடல் சிதறி பலியாகினர்.
இந்த சம்பவத்தை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எம்.ஹெச்.17 என்ற பெயரை நிறுத்தி வைத்தது. அதன் பிறகு தான் எம்.ஹெச். 19 அறிமுகப்படுதத்ப்பட்டது. முன்னதாக 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 என்ன ஆனது என்று இதுவரை எதுவும் தெரியவில்லை.
பிரான்ஸ் அருகே கிடைத்த விமான பாகம் மாயமான விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.