குடும்பப் பிரச்சினையில் மனைவியைக் கத்தியால் முதுகில் குத்திய கணவன்!
சேலம்: சேலத்தில் குடும்பப் பிரச்சினையில் மனைவியை முதுகில் குத்திய கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் குகைப்பகுதியை சேர்ந்தவர் சிட்டு ஆசாரி இவரது மனைவி லோகாம்பாள் நேற்றிரவு கணவன் - மனைவி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் சித்தாசாரி தனது மனைவியின் முதுகில் கத்தியால் குத்தினார்.
அதில் முதுகு எழும்பில் கத்தி குத்தியதில் லோகாம்பாள் பலத்த காயமுற்று வலியால் அலறினார், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் லோகாம்பாளை சேலம் அரசு மருத்துவமனையில் 9 மணியளவில் சேர்த்தனர்.
அப்போது பணியில் இருந்த மருத்துவர் ராஜராஜன் தலைமையிலான மருத்துவர்குழு இரவு 3 மணியில் இருந்து காலை 7 மணி வரை 4 மணி நேரமாக அறுவை சிகிச்சை செய்து முதுகில் இருந்து கத்தியை வெளியே எடுத்தனர். இப்பொழுது லோகாம்பாள் அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.