For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரி அருகே இளம் பெண் குளிப்பதை ரசித்த தொழிலாளி...தர்ம அடி!

புதுச்சேரி அருகே இளம் பெண் குளிப்பதை மறைந்து நின்று ரசித்த தொழிலாளி அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றார். இதையடுத்து அவரை பிடித்த கிராம மக்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பெண் ஒருவர் குளிப்பதை மறைந்து நின்று பார்த்து ரசித்த நபர் அவரைப் பலாத்காரம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கிராம மக்களே பிடித்து அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

கன்னியகோவிலை அடுத்த உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜாராமன் என்பவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர் நேற்று அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குளிப்பதை பார்த்து ரசித்துள்ளார்.

Man watches woman's bathing, handed over to the police

பின்னர் அந்தப் பெண்னை ராஜாராமன் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

பெண்ணின் கூச்சலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டு அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்த கிராம மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து ராஜாராமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
A man watched a woman's bathing and attempted to molest her. After hearing the shouting of the girl, neighbors came to rescue her and caught the man. Later he was handed over to the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X