For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பஸ் நிலையத்தில் பிச்சையெடுக்கும் 'காந்திசிலை'.. களைகட்டும் சில்லரையும், செல்ஃபியும்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பஸ் நிலையங்களில் மகாத்மா காந்தி வேடமணிந்து முதியவர் பிச்சை எடுக்கும் சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது.

காந்தியைப் போன்று வேடம் அணிந்த முதியவர் ஒருவர் புறநகரான திருவள்ளுர், சென்னை நகர பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி பஸ் நிலையங்கள் அருகே மாற்றி மாற்றி பிச்சை எடுத்து வருகிறார்.

Man with Gandhi get-up beg money in Chennai

சில்வர் பெயிண்டை பூசிக்கொண்டு காந்தி சிலை போலவே காட்சியளிக்கும் அவர், யாராவது, பேச்சு கொடுத்தாலும் பேசமாட்டார். அசையாமலே சிலை போல நிற்கிறார்.

அன்றைய நாளில் எதிர்பார்க்கும், பிச்சை பணம் வசூலானதும் வேடத்தை கலைத்துவிட்டு செல்கிறார். காந்தி வேடத்தில் அசையால் நிற்கும்போது சாலையில் செல்வோர் அவருக்கு சில்லரை போடுவதுடன் அவருடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.

இருப்பினும், காந்தி வேடத்தில் இந்த முதியவர் பிச்சையெடுப்பது தேசியவாதிகளை ஆதங்கம் கொள்ள செய்துள்ளது. இது காந்தியின் மதிப்பையும், மாண்பையும் குலைப்பதாக உள்ளதாக அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

English summary
A man with Gandhi ji get-up beg money with Chennai bus passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X