டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு- மணப்பாறை விவசாயிகள் அங்கப்பிரதட்சணம்- வீடியோ
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மணப்பாறையைச் சேர்ந்த விவசாயிகள் அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டம் நடத்தினர்.
திருச்சி: டெல்லியில் போராடும் தமிழக விவாசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மணப்பாறையைச் சார்ந்த விவசாயிகள் வேப்பிலை கட்டிக்கொண்டு மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து போராடினர்.
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டாம்கட்டமாக டெல்லியில் போராடி வருகின்றனர். நதிகளை இணைக்க வேண்டும், வங்கிகளில் உள்ள விவசாய பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மணப்பாறையைச் சேர்ந்த விவசாயிகள் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் உடலில் வேப்பிலையைக் கட்டிக்கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்து போராடினர்.
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு தமிழகம் மட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.