படிச்சவர்தானே நீஙக. அப்படீன்னா 'மன்னை' கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம்!
இணையதளப் புகழ் மன்னை சாதிக், தனது டிவிட்டர் பக்கத்தில் பொது அறிவுக் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.
சென்னை: பேஸ்புக்கில் கல்பனா அக்காவைப் போலவே தனது அதிரடி பதிவுகளால் பிரபலமானவர் மன்னை சாதிக். தற்போது இவர் டிவிட்டரில் 'வாசம்' செய்கிறார்.
அவ்வப்போது தனது அதிரடி பதிவுகளால் அலற வைக்கும் இவருக்கும் ரசிகர்ள் ஏராளம்.
நிஜமாகவே இவருக்கு காந்தக் குரல். ஆனால், பாடல்கள் பாடுவது போல், அடிக்கடி பேசியும் தனது வீடியோக்களை இவர் பதிவேற்றம் செய்து வருகிறார்.
என் கேள்விக்கென்ன பதில் முடியுமா டவிட்டர் படிச்ச அறிவாலிங்ளா??????? மன்னைசாதிக் pic.twitter.com/5P4Z1kdTHU
— மன்னை சாதிக் (@mannai_sathik) October 14, 2016
அந்தவகையில் தற்போது டிவிட்டர்வாசிகளிடம் அவர் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, 'முதல்வர், சீப் மினிஸ்டர், சி.எம். என்கிறோம். இதேபோல், பிரதமரை பிரைம் மினிஸ்டர், பி.எம். என்கிறோம். ஆனால், ஜனாதிபதியை பிரசிடெண்ட் என்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். அதற்கு சுருக்கம் இல்லை. ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் நீங்கள் முட்டாள்கள் தான்' எனத் தெரிவித்துள்ளார்.
இவர் கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் டவிட்டர்வாசிகளே!