ஓபிஎஸ் அணி தலைவர்கள் பதவி கேட்பதால் இணைப்பில் தாமதம்?
ஜெயலலிதா நினைவிடத்தில் இரவு 7.30 மணிக்கு அதிமுகவின் இரு அணிகளும் இணைகின்றன.
சென்னை: ஓபிஎஸ் அணி தலைவர்கள் சிலர் தங்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பதவி தந்தாக வேண்டும் என நெருக்கடி தருவதால் திட்டமிட்ட நேரத்தில் இணைப்பு நடைபெறாமல் தாமதமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா சமாதியில் இரவு 7.30 மணிக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்தித்து இரு அணிகளும் இணையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஜெயலலிதா சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இரு அணி தொண்டர்களும் ஜெயலலிதா சமாதியிலும் அதிமுக தலைமை அலுவலகத்திலும் காத்திருக்கின்றனர். இருப்பினும் இணைப்பு என்பது தாமதமாகிக் கொண்டே செல்கிறது.
ஓபிஎஸ் அணி தரப்பில் சிலர் தங்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் முக்கிய பதவி வேண்டும் என நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் அணியிடம் இருந்து ஈபிஎஸ் அணிக்கு கடைசிநேர க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை.
இதையடுத்து இரு அணிகள் இணைப்பு தாமதமாவதாக கூறப்படுகிறது.