ஓபிஎஸ், ஈபிஸ் அணிகள் உடனடியாக இணையும்.. எச். ராஜா டுவிட்டர் பதிவு
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் உடனடியாக இணையும் என்று பாஜக தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் விரைவில் இணைந்துவிடும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று இன்று அறிவித்தார். மேலும், அவர் வாழ்ந்த போயர்ஸ் கார்டன் வீடு அரசுடைமையாக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி இணைவதற்காகவே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
The two conditions put by Mr.OPS that Mannargudi group should be out, and judicial enquiry about the death ofJJ is met by CM.Merger imminent
— H Raja (@HRajaBJP) August 17, 2017
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் முன் வைத்த 2 முக்கிய கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன. எனவே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய 2 அணிகளும் விரைவில் இணையும் என்று எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.