குற்றவாளி ஜெ,. படத்தை வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன்!
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுத்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுத்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் +2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு பேட்டி அளித்தார்.
சட்டத்தை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு முன் உதரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்கள் இப்படி பகிங்கரகமாக குற்றவாளிகளின் படத்தை வைத்துக் கொண்டு பேட்டியளிப்பது கொடுமையான ஒன்று. அத்துடன் ஜெயலலிதா இறந்துவிட்டதாலேயே அவர் குற்றவாளி இல்லை என வாதிட்டு வருவதும் வேதனைக்குரியதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.