ஏ.என்.32 விமானத்தில் பயணித்த தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணன் உட்பட 29 பேரின் பெயர் பட்டியல் வெளியீடு
சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி சென்ற ஏ.என்-32 விமானத்தில் பயணித்த தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணன் உட்பட 29 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை ஏ.என்.32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் அது சென்னைக்கு அருகே திடீரென மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால் கடந்த 5 நாட்களாக அந்த விமானத்தை தேடும்பணி நடந்து வருகிறது.
இதையடுத்து 29 பேர் பயணித்த அந்த விமானத்தை தேடும் பணியில் 17 கப்பல்கள் 14 ஹெலிகாப்டர்கள், 9 போர் விமானங்கள் ஈடுபட்ட போதிலும் கடந்த 5 நாட்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த விமானப்படை அதிகாரிகாள், துணை விமானி, ராணுவ வீரர்கள் உள்பட 29 பேரின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
பட்சாரா (கேப்டன்), பி.கே.நந்தால் (துணை கேப்டன்), குணார் பார்பேட்டி, ரஞ்சன் (பொறியாளர்), ஜி.சவுத்ரி, கபில், தீபிகா, பி.சந்த், முத்துகிருஷ்ணன், முகேஷ் தாகூர், சி.எஸ்.யாதவ், ஏக்நாத் தாக், ஜின்சா ஷியாம், விமல், பிரசாத் பாபு, பூர்ண சந்திரா, சந்திரன் மகாராணா, சின்ன ராவ், சீனிவாச ராவ், அகிலேஷ், பிபின் குமார், எல்.கே. திரிபாதி, ரகுவீர் வர்மா, நவ்ஜோத் சிங், ரவிதேவ் சிங், சம்பவ் மூர்த்தி, பூபிந்தர் சிங், நாகேந்திர ராவ், சஜீவ் குமார் ஆகியோர் விமானத்தில் பயணம் செய்தனர். இதில் முத்துகிருஷ்ணன் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.