பொய்யிலே பிறந்து..., கெட்டிக்காரி..., மாடி மேல மாடி கட்டி..: ஜெ. பற்றி 3 பாட்டு பாடிய ஸ்டாலின்
சேலம்: முதல்வர் ஜெயலலிதா பற்றி சில பாடல்களை பாடி காட்டியுள்ளார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் பெண்களுக்கு மட்டும் அல்ல பெண் போலீசாருக்கும் கூட பாதுகாப்பு இல்லை. முதல்வரை காணொலி காட்சியில் மட்டும் தான் பார்க்க முடிந்தது. 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களை சந்தித்த ஜெயலலிதா அதன் பிறகு மக்களை கண்டுகொள்ளவே இல்லை.
ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. அந்த பின்னடவை சரி செய்யத் தான் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் மதுவிலக்கு உள்பட 501 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.
ஜெயலலிதா பற்றிம் பேசும்போது ஸ்டாலின்,
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே, கெட்டிக்காரி... தக்குமிக்கு திக்குதாளம், மாடி மேல மாடி கட்டி... கோடி கோடி சேர்த்து வைத்த கோமானே ஆகிய மூன்று பாடல்களை பாடினார்.