எதற்கும் அஞ்சாதவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா! - முக ஸ்டாலின் புகழாரம்
சென்னை: எதற்கும் அஞ்சாமல், எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு, சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானத்தை முன் மொழிந்தார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அப்போது, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை, ஆளும் கட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்த்த பாடுபட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சி தலைவராக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.
தமிழக நலனுக்காக இணைந்து பாடுபடுவோம் என்று என்னிடம் கூறியவர் ஜெயலலிதா. எதுற்கும் அஞ்சாமல், கவலைப்படாமல் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றவர் என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.