For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் கூவத்தூர் திரும்பிய எம்.எல்.ஏக்கள்.. பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அங்கேயே தங்க முடிவு

அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு திரும்பியுள்ளனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு திரும்பியுள்ளனர். பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்கும் வரை அங்கேயேதான் தங்கியிருப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் கூட்டாக பதவியேற்றனர். அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு திரும்பியுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் கூவத்தூர் விடுதிக்கு வந்துள்ளனர்.

MLA's return to kuvathur resort

சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கும் வரை கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
MLA's return to kuvathur resort, After Edappadi K. Palanisamy oath as Tamil Nadu chief minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X