எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் இல்லை... சொல்கிறார் வைகைச்செல்வன்
எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் இல்லை என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: எம்எல்ஏக்கள் அனைவரும் ஆங்காங்கே இருப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். ஆளுநர் சந்திக்க வேண்டும் என்றால் அவர்கள் வருவார்கள் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் மாமல்லபுரத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் மன்னார்குடி கும்பலால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச் செல்வன் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ஆங்காங்கே உள்ளனர். ஆளுநர் பார்க்க வேண்டும் என்றால் அவர்கள் வரவார்கள் என்றும் அவர் கூறினார். இதன்மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படவில்லை என சூசகமாக தெரிவித்துள்ளார்.
கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களின் செல்போனை பிடுங்கி வைத்துள்ள மன்னார்குடி கும்பல் அவர்களை மற்றவர்களிடம் பேச தடைவிதித்துள்ளனர். டிவி, இன்டர்நெட் போன்ற சேவைகளையும் அவர்கள் துண்டித்துள்ளதால் ரிசார்ட்டில் 12 எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகிருப்பது குறிப்பிடத்தக்கது.